கமல் நாக்கை அறுக்க வேண்டும் என கூறிய அமைச்சர் மீது கடும் நடவடிக்கை: எஸ்.பியிடம் மநீம வலியுறுத்தல்

சென்னை: கமல் நாக்கை அறுக்க வேண்டும் என கூறிய தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காஞ்சி மேற்கு மாவட்ட மக்கள் நீதி மய்யம் பொறுப்பாளர் தீனதயாளன் எஸ்பி சந்தோஷ் ஹதிமானியிடம் புகார் அளித்தார். புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

ஓட்டப்பிடாரம் இடைத்தேர்தல் பரப்புரையின்போது இந்துக்கள் குறித்து கமல் கருத்தை தெரிவித்தார். ஆனால் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர் சந்திப்பில் கமல் கொழுப்பெடுத்த நாக்கை அறுக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும் மக்கள் கமல் நாக்கை அறுப்பார்கள் என்று வன்முறையை தூண்டும் வகையில் பேசியுள்ளார்.  இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின்படி பதவி பிரமாணம் செய்து கொண்ட அமைச்சர் என்பதையும் மறந்து கருத்து தெரிவித்துள்ளார். மக்களிடையே மற்றும் வன்முறையை தூண்டும் விதமாக பொறுப்பில் இருக்கும் அமைச்சர் பேசுவது இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மீறிய செயலாகும். மேலும் தனி நபர் மீது தாக்குதல் செய்து பேட்டி அளிப்பது என்பது இந்திய தண்டனை சட்டத்தின்படி குற்றமாகும். எனவே அமைச்சர் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார். 

Related Stories: