சொல்லிட்டாங்க...

* எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை விரிவாக்கம் என உழவை அழிக்கும் மத்திய அரசு, எஞ்சிய நிலங்களையும் சீரழிக்க குழாய் பாதை திட்டத்தை செயல்படுத்த துடிக்கிறது. - பாமக நிறுவனர் ராமதாஸ்

* மத்தியில் யார் பிரதமராக வருவார் என்பதை இப்போது உறுதி செய்ய முடியாது.  - கர்நாடக முதல்வர் குமாரசாமி

* தமிழக அரசு அதிகாரிகள் கவலையின்றி அலட்சியப்போக்குடன் செயல்படுவதால், கெயில் நிறுவனம் விருப்பம்போல விளைநிலங்களை சீரழிக்கும் பணியை செய்து வருகிறது. - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

* கலவரத்தை தடுக்க வேண்டிய தேர்தல் ஆணையம் கமலின் கருத்து சுதந்திரத்தை தடுக்கும் வகையில் பிரசாரத்திற்கு தடை விதித்துள்ளது. - இந்திய கம்யூனிஸ்ட் மாநில துணை செயலாளர் சுப்பராயன்

Related Stories: