பாஜ எம்எல்ஏ.வை கொலை செய்த நக்சலைட் கைது

தண்டேவாடா:  சட்டீஸ்கர் மாநிலம், தண்டேவாடா மாவட்டத்தில் உள்ள சியாம்கிரி கிராமத்தில் பாஜ எம்எல்ஏ பீமா மாண்டவி சென்ற வாகனம் மீது நக்சலைட்கள் கடந்த மாதம் 9ம் தேதி வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதில், பீமா மாண்டவி மற்றும் 4 போலீசார் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், போலீஸ் நடவடிக்கையை கண்டித்து நக்சலைட்கள் இன்று மாநிலம் தழுவிய பந்த்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதையொட்டி, தண்டேவாடா சிறையில் அடைக்கப்பட்டுள்ள நக்சலைட்களை சந்திப்பதற்காக நேற்று சிலர் வந்தனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரித்ததில், ஜீவன் அலியாஸ் ஹேம்லா என்பவர், எம்எல்ஏ. கொலையில் தொடர்புடையவர் என தெரிந்தது. அவரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: