தேசப்பிதா மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர் என்று, பாஜ தலைவர் பிரக்யாசிங் தாகூர் கூறியுள்ளார். மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள 29 மக்களவை தொகுதிக்கு நான்கு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதன்படி 3 கட்ட தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், வரும் 19ம் தேதி நான்காவது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் நடக்கிறது. இம்மாநில தலைவர் போபாலில், காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங்கை எதிர்த்து, பாஜ சார்பில் பெண் சாமியாரும், பாஜ தலைவர்களில் ஒருவருமான பிரக்யாசிங் தாகூர் போட்டியிடுகிறார். சர்ச்சை கருத்துக்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தி வரும் பிரக்யா சிங், சமீபத்தில் தீவிரவாதிகளின் குண்டுக்கு பலியான போலீஸ் அதிகாரி ஹேமந்த் கர்கரே தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். கர்கரே தன்னை விசாரணையின்போது கொடுமைப்படுத்தியதால், தான் விட்ட சாபத்தினால் அவர் தீவிரவாதிகளின் குண்டுக்கு பலியானார் என்று கூறினார். இது பெரும்பரப்பை ஏற்படுத்தியது.