7 பேர் பலியான பட்டாசு ஆலையில் மீண்டும் விபத்து ஒருவர் சாவு

திருவேங்கடம்: நெல்லை மாவட்டம், திருவேங்கடம் அருகே வரகனூர் கிராமத்தில் தனியார் பட்டாசு ஆலையில் கடந்த பிப்ரவரி 22ம் தேதி பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் பெண் உட்பட 7 பேர் பலியாயினர். இதைத் தொடர்ந்து கலெக்டர் உத்தரவுப்படி அந்த பட்டாசு ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று அந்த பட்டாசு ஆலை குடோன் அருகே  கோபால் (64) உட்பட 5 பேர் விறகு அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக அந்த குடோனில் விழுந்த தீப்பொறியால் அங்கிருந்த வெடிகள் வெடிக்கத் தொடங்கியது. இதில் அந்த கட்டிடம் முழுவதும் இடிந்து தரைமட்டமானது. இதில் கோபால்இறந்தார். மற்ற 4 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories: