ஹுப்பள்ளி: கர்நாடகாவில் முதல்வர் குமாரசாமி தங்கியிருந்த ஓட்டலில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.கர்நாடகாவில் காலியாக இருக்கும் சிஞ்சோளி, குந்தகோளா சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வரும் 19ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதில், போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ், பாஜ, மஜத கட்சி தலைவர்கள் இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து நேற்று முன்தினம் சிஞ்சோளியில் பிரசாரம் செய்த முதல்வர் குமாரசாமி, இரவில் ஹுப்பள்ளி மாநகரில் உள்ள டெனிசஸ் ஓட்டலில் தங்கினார். அதே ஓட்டலில் மாநில அமைச்சர்கள் தேஷ்பாண்டே, ஜமீர் அகமதுகான் ஆகியோரும் தங்கினர்.