புவனேஸ்வர்: ஒடிசாவில் மக்களவைத் தேர்தல் வாக்குகளுடன் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குகளும் சேர்த்து எண்ணப்பட இருப்பதால், மக்களவைத் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்படும் என்று அம்மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.ஒடிசாவில் உள்ள 21 மக்களவைத் தொகுதிகளுக்கும் 147 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் சேர்த்து கடந்த ஏப்ரல் 11, 19, 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் 4 கட்டமாக தேர்தல் நடந்து முடிந்தது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் பாதுகாப்பான அறையில் வைக்கப்பட்டுள்ளன. மே 23ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்நிலையில் தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கான பயிற்சி நிகழ்ச்சியில் அம்மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி சுரேந்திர குமார் பேசியதாவது:ஒடிசாவில் சட்டப்பேரவை, மக்களவை தேர்தலுக்கான வாக்குகள் ஒரே சமயத்தில் எண்ணப்படுவதால் மக்களவை தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட கூடும்.