இடைத்தேர்தல் நடைபெறுவதால் டிஎன்பிஎஸ்சி தேர்வு தள்ளிவைப்பு: செயலாளர் தகவல்

சென்னை: இடைத்தேர்தல் நடைபெறுவதால் டிஎன்பிஎஸ்சி தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்று டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார் தெரிவித்துள்ளார். இது குறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய செயலாளர் நந்தகுமார் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அருங்காட்சியக துறை பொறுப்பாளர் பதவிக்கான தேர்வை  வருகின்ற 19.05.2019 அன்று நடத்துவதாக அறிவிக்கை வெளியிட்டிருந்தது.

 இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையம், சட்டமன்றத்திற்கான இடைத்தேர்தலை வருகின்ற 19.5.2019 அன்று அரவக்குறிச்சி, சூலூர், திருப்பரங்குன்றம் மற்றும் ஓட்டப்பிடாரம் ஆகிய நான்கு தொகுதிகளில் நடத்துவதாக அறிவித்துள்ளது, இத்தேர்தலை கருத்தில் கொண்டும், ஒரு சில நிர்வாக காரணங்களுக்காகவும் 19.5.2019 அன்று நடைபெறவிருக்கும் எழுத்து தேர்வை 25.5.2019 அன்று நடத்த தேர்வாணையம் முடிவு செய்துள்ளது. இத்தேர்வு ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த சென்னை, மதுரை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய 3 தேர்வு மையங்களில் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: