ரம்பான்: ஜம்மு காஷ்மீரில் புல்வாமா தாக்குதலை போன்று மீண்டும் ஒரு பயங்கரவாத தாக்குதலை அரங்கேற்ற இருந்த 2 தீவிரவாதிகளை பாதுகாப்புப்படையினர் கைது செய்துள்ளனர். ஜம்மு காஷ்மீரின் ரம்பான் மாவட்டத்தில் உள்ள கூல் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து பாதுகாப்புப்படையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து நேற்று இரவு தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் பதுங்கியிருந்த 2 தீவிரவாதிகளை சுற்றிவளைத்த பாதுகாப்புப்படையினர் அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து பணம் மற்றும் குவியல், குவியலாக ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து நடத்திய விசாரணையில் அவர்கள் புல்வாமா தாக்குதலை போன்று மற்றுமொரு பயங்கரவாத தாக்குதலை நிகழ்த்த திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. அவர்களை கைது செய்ததன்மூலம் சதித்திட்டம் தவிர்க்கப்பட்டது. அவர்கள் எந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.