இமாச்சலப் பிரதேசம், சிம்லா அருகே சம்பா மாவட்டம் சோகன் மைதானத்தில் நேற்று நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பாஜ தேசிய தலைவர் அமித்ஷா பங்கேற்று பேசியதாவது: காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, அவரது மாநிலத்திற்கென தனி பிரதமர் வேண்டும் என்கிறார். காங்கிரசோ, தேசத் துரோக சட்ட திருத்தம் மற்றும் ஆயுதப் படை சிறப்பு அதிகார சட்டம் ஆகியவை மறு ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என தேர்தல் வாக்குறுதியில் கூறி உள்ளது. இதுவே, அவர்களின் மனநிலையை தெளிவாக காட்டுகிறது.