தரங்கம்பாடி: நாகை மாவட்டம் தரங்கம்பாடி கேசவன்பாளையத்தை சேர்ந்த கூலி தொழிலாளியான மதியழகன் மகள்கள் கவியரசி (21), கலையரசி (19). இருவரும் பொள்ளாச்சி தேவனாம்பாளையத்தில் உள்ள ஆடை தயாரிக்கும் நிறுவனத்தில் தங்கி வேலை செய்து வந்தனர். விடுமுறைக்கு வீட்டிற்கு வந்த இவர்கள் கடந்த 6ம் தேதி இரவு இப்பகுதியை சேர்ந்த 5 பேருடன் பொள்ளாச்சிக்கு புறப்பட்டனர். இரவு 9.45 மணியளவில் கேசவன்பாளையத்தில் இருந்து 500மீ தூரத்தில் உள்ள தரங்கம்பாடி பஸ்நிலையத்திற்கு தேசிய நெடுஞ்சாலை வழியாக நடந்து சென்றனர். அப்போது காரில் வந்த மர்ம கும்பல் கவியரசியை கடத்த முயற்சித்தனர். கவியரசி அவர்களுடன் போராடினார். சாலையிலேயே அவரை சிறிது தூரம் தரதரவென அக்கும்பல் இழுத்துச்சென்றது. அவரது தங்கை கலையரசி அவரை காப்பாற்ற முயன்றபோது அவரும் படுகாயமடைந்தார். உடனே இருவரையும் அந்த கும்பல் விட்டுவிட்டு தப்பிசென்றது. இதில் படுகாயமடைந்த இருவரையும் காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு கலையரசிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு திரும்பினார்.