லண்டண்: லண்டனில் உள்ள வணிகவளாகம் ஒன்றில் வேலை பார்த்த ஐதராபாத் இளைஞர் மர்ம நபரால் குத்தி கொலைசெய்யப்பட்டார். ஐதராபாத்தை சேர்ந்த முகமது நதீமுதின் கடந்த 6 ஆண்டுகளாக லண்டனில் வசித்தபடி டெஸ்கோ சூப்பர்மார்க்கெட் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். அண்மையில் நதீமுதினை தொடர்பு கொண்ட அவரது பெற்றோர், அவரிடம் பேச நீண்ட நேரம் முயற்சித்துள்ளனர். ஆனால் மகனுடன் பேச முடியாததால், அவர் வேலை பார்த்த வணிக வளாகத்தை தொடர்பு கொண்டுள்ளனர்.