அயர்லாந்து: பிரிட்டனுக்கு பிறகு அயர்லாந்தில் பருவநிலை அவசரநிலை எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. புவி வெப்பமடைதலை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி ஐரோப்பிய நாடுகளில் பருவநிலை ஆய்வாளரான 16 வயதாகும் கிரெட்டா தன்பெர்க் என்ற சிறுமி தொடர் போராட்டங்களை நடத்தினார். அந்த போராட்டங்களுக்கு உலகளவில் இருந்து பெரும் ஆதரவு கிடைத்த நிலையில், கடந்த மே 1-ம் தேதி உலகிலேயே முதன் முறையாக பிரிட்டனில் பருவநிலை அவசரநிலை எச்சரிக்கை அறிவிக்கப்பட்டது.