புதுடெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக இந்திராணி முகர்ஜி அப்ரூவராக சிபிஐ அனுமதி வழங்கியுள்ளது. இந்திராணி முகர்ஜி அப்ரூவராக மாறுவதில் தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்திராணி முகர்ஜி வரும் 23ம் தேதி டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.