அரியான: பஞ்சாப் அமைச்சர் மீது செருப்பு வீசிய பெண்ணை போலீசார் கைது செய்தனர். அரியானா மாநிலம் ரோத்தக் மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பஞ்சாப் மாநில அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து பிரசாரம் செய்தார். இதற்காக பிரசார பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த கூட்டத்தில் பேசிய சித்து, பாஜ ஆட்சியை விமர்சித்து பேசினார். அப்போது, அங்கு கூடியிருந்த ஒரு கும்பல், மோடிக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியது.