ஒஸ்லோ: நார்வேயில் தண்ணீரில் விழுந்த செல்போனை மீட்டெடுத்த திமிங்கலத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நார்வேயில் கடந்த வாரம் சந்தேகத்திற்குரிய வகையில் திமிங்கலம் ஒன்று பிடிப்பட்டது. அந்த திமிங்கலமானது உளவு பார்க்கும் விதமாக ரஷ்யாவால் அனுப்பப்பட்டிருக்கலாம் என பலரால் கூறப்பட்டது. இதனை தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களும் எழுந்தது. இதனை தொடர்ந்து அதிகாரிகள் அது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.