மதுரை: சென்னையில் இருந்து மதுரை வந்த காரில் 3 கிலோ தங்கத்தை, தேர்தல் பறக்கும் படையினர் நேற்று காலை மேலூர் அருகே பறிமுதல் செய்தனர்.தமிழகத்தில் மக்களவை தேர்தல் முடிந்தும், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 தொகுதிகளில் இடைத்தேர்தல் வரும் 19ம் தேதி நடக்க இருப்பதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. தேர்தல் பறக்கும் படையினர் தொடர்ந்து தீவிர வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று அதிகாலை சென்னையில் இருந்து மதுரைக்கு வந்த காரை, மேலூர் அருகே சிட்டம்பட்டி சோதனைச்சாவடியில் பறக்கும் படை அதிகாரிகள் நிறுத்தி சோதனை செய்தனர். காரில் 3 கிலோ தங்கம் இருந்தது தெரியவந்தது.