ஒகேனக்கல்: ஒகேனக்கல் வனப்பகுதியில் முனுசாமி என்பவர் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த 1-ம் தேதி பண்ணப்பட்டி வனப்பகுதியில் உறவுக்கார பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்த முனுசாமி நாட்டுத்துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்தார். இந்நிலையில் பென்னாகரம் அருகே சிகரஅள்ளி என்ற இடத்தில் பதுங்கியிருந்த ஒருவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.