சென்னை: தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை முதல் ரமலான் நோன்பு தொடங்கும் என்று தமிழக தலைமை காஜி அறிவித்துள்ளார். இன்று ரமலான் பிறை தென்படதை அடுத்து இந்த அறிவிப்பை தலைமை காஜி அறிவித்துள்ளார். வளைகுடா உள்ளிட்ட உலகின் சில நாடுகளில் நாளை முதல் ரமலான் நோன்பு கடைபிடிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் மூன்றாவது கடமையாக ரமலான் நோன்பு திகழ்கிறது. ஏழைகளின் பசியை உணராமல் வசதி படைத்தவர்கள் சொகுசாக வாழ்வதும், ஏழைகள் குடல் கொதித்து பட்டினியால் சாவதும் சமத்துவம் ஆகாது. எனவே, பசியின் அருமையை உணர்த்தி, பசித்தவருக்கு அன்னமிடும் நற்பண்பை செல்வந்தர்களுக்கு உணர்த்தவும், பசியின் கொடுமையை செல்வந்தர்களும் அனுபவித்து உணர்ந்து, தான- தர்மங்களை தொடரவும் இஸ்லாத்தில் நோன்பு மூன்றாவது கடமையாக வலியுறுத்தப்பட்டுள்ளது.