ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தம் 25 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. அவற்றில் 13 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 29ம் தேதி தேர்தல் முடிந்தது. மீதமுள்ள 12 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில், இம்மாநில காங்கிரஸ் தலைவரும், துணை முதல்வருமான சச்சின் பைலட் நேற்று அளித்த பேட்டி: தேர்தல் பிரசாரம் என்பது அரசு நிர்வாகம், முதலீடு உள்ளிட்டவை பற்றியதாக இருக்க வேண்டும். காங்கிரசின் பிரசாரத்தில் அவையே முன்னெடுத்து வைக்கப்படுகின்றன. ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் மக்களுக்கு என்ன செய்தோம் என்பதை எடுத்து கூறுவதில் பாஜ தோல்வி அடைந்துள்ளது.