புதுடெல்லி : அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக தமிழக மாணவர் அமைப்பு தரப்பில் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் நேற்று புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் வரும் 12ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. டெல்லியில் உள்ள மாணவர்களுக்கு கல்லூரிகளில் சீட் கிடைக்காமல் இருப்பதற்கு காரணம் தமிழக மாணவர்கள் தான் என்று டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் பேசிய ஆடியோ சர்ச்சையை கிளப்பி உள்ளது. டெல்லியில் உள்ள தமிழக மாணவர் அமைப்பினர் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் நேற்று மனு ஒன்றை கொடுத்துள்ளனர். அதில்,” தமிழக மாணவர்களுக்கு எதிராக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசிய ஆடியோவை உடனடியாக தலைமை தேர்தல் ஆணையம் தடை செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளனர். புகார் மனுவை பெற்றுக்கொண்ட ஆணைய அதிகாரிகள் இது சம்பந்தமாக நடவடிக்கை எடுப்பதாக அவர்களிடம் நேற்று உறுதி அளித்துள்ளனர்.