துபாய்: மனித இனம் எனப்படும் ஹோமோ சேப்பியன்கள் ஆப்பிரிக்காவில், 3 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றி, நியாண்டர்தால் மற்றும் டெனிசோவான்ஸ் உள்ளிட்ட ஆறு விதமான மனித இனங்களுடன் இவ்வுலகில் வாழ்ந்ததாக ஆராய்ச்சியளர்கள் நம்புகின்றனர். தொடர்ந்து மனித இனம் தோற்றம் குறித்த ஆய்வுகள் நடைபெற்று வருகிறதுவட ஆப்பிரிக்காவின் பல்வேறு பகுதிகளிலும், சஹாரா பகுதிகளிலும் பழங்கால மண்டை ஓடுகள் கிடைக்க பெற்று ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பண்டைய மனிதனின் வடிவத்தின் தாடை மேற்கு சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டது. இது டெனிசோவான்ஸ் மனித இனத்தை சேர்ந்வர் என்றும் இவர்கள் 1,60,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.