வே.ஆனைமுத்து துணைவியார் மறைவு

சென்னை: மார்க்சிய - பெரியாரிய பொதுவுடைமை கட்சியின் பொதுச் செயலாளரும், பெரியாரியல் அறிஞருமான வே.ஆனைமுத்து சென்னையை அடுத்த தாம்பரத்தில் வசித்துவருகிறார். இவரது மனைவி சுசிலா அம்மாள்(83) உடல் நலக்குறைவால் நேற்று முன்தினம் மரணமடைந்தார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்கு தாம்பரம், இரும்புலியூரில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டது.  விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், புதுவை முன்னாள் முதலமைச்சர் ரங்கசாமி, பழ.நெடுமாறன் உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் மருத்துவ ஆராய்ச்சி மாணவர்களுக்காக போரூர் ராமச்சந்திரா மருத்துவ கல்லூரிக்கு ஒப்படைக்கப்பட்டது.  சுசிலா அம்மையார் மறைவுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,  பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: