தருமபுரி: தருமபுரி ஒகேனக்கல் வனப்பகுதியில் துப்பாக்கியால் சுட்டு இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். சிறுமியுடன் வனத்துக்குள் சென்ற இளைஞரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பியோடிய மர்மநபர்களுக்கு போலீஸ் வலை வீசியுள்ளனர். பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றவர்களிடம் இருந்து தப்பி வந்து சாலையில் சிறுமி உதவி கோரினார். சிறுமி அளித்த தகவலின் அடிப்படையில் இளைஞரை சுட்டுக்கொன்றவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.