சென்னை : சென்னையை அடுத்த வண்டலூர் கிளாம்பாக்கத்தில் அமைக்கப்படும் புதிய பேருந்து நிலையத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னை வண்டலூர் அருகேயுள்ள கிளாம்பாக்கத்தில் 44 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.393 கோடியில் அதிநவீன வசதிகள் கொண்ட புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்தது. ஏற்கனவே 350 கோடி ரூபாயாக திட்டம் வகுக்கப்பட்டு, பின்னர் 417 கோடி ரூபாயாக திட்டம் உயர்த்தப்பட்டிருக்கிறது. அதன்படி கடந்த பிப்ரவரி மாதம் தமிழக முதலமைச்சர் பேருந்து நிலையத்துக்கு அடிக்கல் நாட்டினார். இந்நிலையில் புதிய நிலையத்திற்கு எதிராக நடராஜன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழங்கு தொடர்ந்துள்ளார். மனுவில் கடந்த 1970ம் ஆண்டு கஸ்தூரி என்பரிடம் இருந்து நில உச்ச வரம்பின் கீழ் இந்த நிலம் கைப்பற்றப்பட்டது.
