ராசிபுரம்: ராசிபுரம் அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகளில் பிறந்த 5 குழந்தைகளின் பிறப்பு சான்றிதழில் தவறான முகவரி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 5 சான்றிதழ்களில் உள்ள முகவரிகளில் வசிக்கும் பெண்களிடம் குறிப்பிட்ட குழந்தைகள் இல்லை என திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. ஒரு அரசு மருத்துவமனை, ஒரு ஆரம்ப சுகாதார நிலையம், 15 தனியார் மருத்துவமனைகளில் நடந்த சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.