வாரணாசியில் காங். வேட்பாளர் அறிவிப்பு மோடியை எதிர்த்து அஜய் ராய் போட்டி: பிரியங்கா காந்தி போட்டியில்லை

உத்தரப் பிரதேசத்தில் உள்ள வாரணாசி மக்களவை தொகுதியில் பிரதமர் மோடி 2வது முறையாக போட்டியிடுகிறார். இதற்காக இன்று அவர் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். இதனிடையே, பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசியில் காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்ற எதிர்பார்க்கப்பட்டது. ‘கட்சி விரும்பினால் மோடியை எதிர்த்து போட்டியிடுவேன்’ என்று  பிரியங்காவும் கூறினார். இந்நிலையில், இந்த தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக அஜய் ராய் அறிவிக்கப்பட்டு உள்ளார். 2014 மக்களவை தேர்தலிலும் இவர்தான் மோடியை எதிர்த்து போட்டியிட்டார். இருப்பினும், இவரால் 3வது இடத்தை மட்டுமே பிடிக்க  முடிந்தது. எனினும், வாரணாசியில் பலம் வாய்ந்த காங்கிரஸ் பிரமுகராக அஜய் ராய் இருப்பதால், மீண்டும் மோடியை எதிர்த்து அவர் களம் இறக்கப்பட்டு இருக்கிறார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: