அரசு துறைகளில் உள்ள 22 லட்சம் காலிபணியிடம் ஓராண்டில் நிரப்பப்படும்: ராகுல் உறுதி

உத்தரப் பிரதேசத்தின் லக்மிபூர் கோரி பகுதியில் நேற்று நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ராகுல் பேசியதாவது: கடந்த 2014ம் ஆண்டு ‘நல்ல நாட்கள் வரும்’ என பிரதமர் மோடி பல பொய் வாக்குறுதிகளை அளித்தார். 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு, ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் என அவர் அளித்த வாக்குறுதிகள் எதுவும் உண்மையாகவில்லை. கடந்த 5 ஆண்டுகளில் இந்த காவலாளி, 15 தொழிலதிபர்களை மட்டும்தான் பாதுகாத்தார். விமானமே தயாரிக்காத அனில் அம்பானி நிறுவனத்துக்கு, ரபேல் விமானத்தை கூட்டாக தயாரிக்க ரூ.30 ஆயிரம் கோடி மதிப்பில் ஒப்பந்தம் கொடுக்கப்பட்டது. கரும்பு விவசாயிகள் தங்களுக்கு கிடைக்க வேண்டிய பணத்தை கேட்டால், கரும்பு விவசாயத்தால் சர்க்கரை நோய் ஏற்படுகிறது என்கின்றனர்.

ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருமானம் கிடைக்க காங்கிரஸ் ‘நியாய்’ திட்டம் கொண்டு வருகிறது. பொருளாதார நிபுணர்கள் மற்றும் சிந்தனையாளர்களுடன் ஆலோசித்துதான் இந்த திட்டம் கொண்டு வரப்படுகிறது. அனில் அம்பானி, விஜய் மல்லையா, நீரவ்  மோடி மற்றும் மெகுல் சோக்‌ஷி போன்றவர்களின் கோடிக்கணக்கான கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்போது, 5 கோடி குடும்பங்களின் நலனுக்காக ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் கோடியை அரசால் வழங்க முடியும். விவசாயிகளுக்காக தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அரசுத் துறையில் 22 லட்சம் காலி பணியிடங்கள் ஓராண்டில் நிரப்பப்படும். அதோடு பஞ்சாயத்து அமைப்புகளில் 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படும் என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: