கேரள முதல்வர் பினராய் விஜயன் வாக்களித்த பின்னர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘கேரளாவில் இடதுசாரி மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு இடையேதான் நேரடி போட்டி உள்ளது. எங்குமே பாஜவுடன் மோதல் இல்லை. பாஜ கட்டணி அனைத்து தொகுதிகளிலும் 3வது இடத்துக்கு மட்டுமே வரமுடியும். கேரளாவில் வெற்றி பெறலாம் என்ற பாஜவின் கனவு பலிக்காது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து ஏற்கனவே பல புகார்கள் உள்ளன. இதனால் அதிகாரிகள் இயந்திரத்தை கவனமாக கையாள்வார்கள் என கருதப்பட்டது. ஆனால் நான் ஓட்டுப்போட்ட பூத்திலும், அருகில் உள்ள பல பூத்களிலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதானது. இங்கு மட்டுமல்லாமல் கேரளாவில் பல பகுதிகளிலும் மின்னணு இயந்திரங்கள் பழுதானது தெரியவந்துள்ளது’’ என்றார்.