பாஜ.வுக்கு 3வது இடம்தான் கேரள முதல்வர் பேட்டி

கேரள முதல்வர் பினராய் விஜயன் வாக்களித்த பின்னர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘கேரளாவில் இடதுசாரி மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு இடையேதான் நேரடி போட்டி உள்ளது. எங்குமே பாஜவுடன் மோதல் இல்லை. பாஜ கட்டணி அனைத்து தொகுதிகளிலும் 3வது இடத்துக்கு மட்டுமே வரமுடியும். கேரளாவில் வெற்றி பெறலாம் என்ற பாஜவின் கனவு பலிக்காது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து ஏற்கனவே பல புகார்கள் உள்ளன. இதனால் அதிகாரிகள் இயந்திரத்தை கவனமாக கையாள்வார்கள் என கருதப்பட்டது. ஆனால் நான் ஓட்டுப்போட்ட பூத்திலும், அருகில் உள்ள பல பூத்களிலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதானது. இங்கு மட்டுமல்லாமல் கேரளாவில் பல பகுதிகளிலும் மின்னணு இயந்திரங்கள் பழுதானது தெரியவந்துள்ளது’’ என்றார்.

ஓட்டு போட்டோம்ல... பேஸ்புக்கில் பதிவிட்ட நெட்டிசன்

கர்நாடகாவின் கொப்பள்  மக்களவை தொகுதிக்கு உட்பட்ட காரடகி தாலுகா, பூதுகும்பே கிராமத்தில்  அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் வாக்களித்த ஒருவர், தான் காங்கிரஸ்  கட்சிக்கு வாக்களித்ததை தனது செல்போனில் படம் பிடித்து அதை  சமூகவலைத்தளங்களில் பதிவு செய்துள்ளது வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: