ஒரே குடும்பத்தில் 27 பேர் ஒன்றாக வாக்களிப்பு

மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரின் ரஸ்தாபேத் பகுதியில் போசலே என்பவரின் குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த கூட்டுக் குடும்பத்தில் வாக்களிக்க தகுதியுடைய 27 பேர் உள்ளனர். ஒவ்வொரு தேர்தலிலும் குடும்பத்தினர் ஒன்றாக சென்று வாக்களிப்பதை பாரம்பரியமாக செய்து வருகிறார்கள். நேற்று போசலே குடும்பத்தை சேர்ந்த 27 பேரும் ஒன்றாக ஊர்வலமாக சென்று வாக்களித்தனர். அவர்களில் மூத்தவர் 95 வயதாகும் பார்வதிபாய் போசலே ஆவார். வயதில் குறைந்தவர் அவருடைய பேரன் நிரஞ்சன் (26 வயது). இந்த குடும்பத்தைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலரான ஜெய்சிங் போசலே (60) கூறும்போது, “நாங்கள் எப்போதும் ஒன்றாகவே சென்று வாக்களிப்போம்’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: