பெங்களூரு: கர்நாடகாவில் தேர்தல் பாதுகாப்புப் பணியின் போது காவல் அதிகாரி ஒருவர் குழந்தையை கொஞ்சி மகிழும் புகைப்படம் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடக்கும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, முதல்கட்ட தேர்தல் கடந்த 11ம் தேதியும் 91 தொகுதிகளிலும், 2ம் கட்டமாக தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் 97 மக்களவை தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடந்தது. இதைத்தொடர்ந்து, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், குஜராத், மகாராஷ்டிரம், கர்நாடகம், கேரளம், கோவா, ஒடிசா, சட்டீஸ்கர், அசாம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 115 மக்களவைத் தொகுதிகளுக்கு இன்று 3-ம் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.