கடலூர் : யார் சட்டத்தை மீறினாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடலூர் மாவட்ட எஸ்.பி. கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். சமூக வலைதளங்களில் வரும் செய்தியை உறுதி செய்துகொண்டு சட்ட ரீதியாக போலீசை அணுக வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். கடலூர் மாவட்டத்தில் அமைதியை ஏற்படுத்த மாவட்ட ஆட்சியரை தொடர்ந்து மாவட்ட எஸ்.பி.யும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.