ராமநாதபுரம் : பரமக்குடி அடுத்த தென்னவனூரில் இரண்டுச் சமூகத்தைச் சேர்ந்த 18 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு சமூகத்தினர் குறித்து வாட்ஸ்அப் குரூப்பில் அவதூறு ஆடியோ வெளியானதால் நேற்று பல இடங்களில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின் போது வீடுகளை சேதப்படுத்தியதாக தென்னவனூரில் 18 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதோடு மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.