தோகா: தலிபானுடன் இந்த வார இறுதியில் நடக்க இருந்த அமைதிப் பேச்சுவார்த்தை காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது அமைதி பேச்சுவார்த்தைக்கு பெரும் முட்டுக்கட்டையாக அமைந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அங்கு அமைதியை ஏற்படுத்த அமெரிக்கா முன்வந்தது. கத்தார் தலைநகர் தோகாவில் இந்த வார இறுதியில் இதற்கான பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் இந்த ஏற்பாடு தோல்வியை தழுவி விட்டது. பேச்சுவார்த்தை காலவரையறை இன்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆப்கனில் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகளை தலிபான்கள் தங்கள் ஆதிக்கத்தில் கொண்டு வந்துள்ளனர். ஐநா புள்ளி விவரப்படி அங்கு 3,804 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அமெரிக்கா, இருதரப்பையும் அமைதி பேச்சுவார்த்தையில் பங்கேற்க தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகிறது. இதில் பங்கேற்பவர்கள் பட்டியலை, ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி தலைமையிலான நிர்வாகம் அறிவித்தது. இதில் 250 பேர் பங்கேற்பதாக இருந்தது. இதற்கு தலிபான்கள் ஒப்புக்கொள்ளவில்லை.