சொந்த ஊரில் முதல்வர் எடப்பாடி வாக்களித்தார்

சேலம்: முதல்வர்  எடப்பாடி பழனிசாமி, தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம் சிலுவம்பாளையம்  நெடுங்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், நேற்று காலை 7.30 மணியளவில்  தனது வாக்கை பதிவு செய்தார். முன்னதாக, சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள தனது வீட்டில் இருந்து புறப்பட்ட முதல்வர், சொந்த ஊரான சிலுவம்பாளையத்தில்  உள்ள முருகன் கோயிலில் சாமி கும்பிட்டார்.

பின்னர், வீட்டில் இருந்து அருகில் உள்ள நெடுங்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்களிக்க  நடந்தே சென்றார். அப்போது, அங்கு 25க்கும் மேற்பட்டவர்கள் வரிசையில் நின்றிருந்தனர். எடப்பாடி பழனிசாமியும், அவர்களுடன் வரிசையில் நின்று வாக்களித்தார். இந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உள்ள 172வது பூத்தில், முதல்வர் தனது வாக்கை பதிவு செய்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: