ராசிபுரம்: ராசிபுரம் அருகே வெண்ணந்தூர் அடுத்துள்ளது கல்கட்டானூர் ஏரி. இந்த ஏரிக்கு சேலம் சேர்வராயன் மலைப்பகுதியில் இருந்து வரும் தண்ணீர் திருமணிமுத்தாறு வழியாக ஆட்டையாம்பட்டி, மதியம்பட்டி, அக்கரைப்பட்டி, ஓ.சவுதாபுரம் மற்றும் சுற்றுவட்டார ஏரிகளில் தண்ணீர் நிரம்பி வருகிறது. இந்த ஏரிகளில் மீன்கள் வளர்க்க குத்தகைக்கு விடுவது வழக்கம். கல்கட்டானூர் ஏரியில் கட்லா, ரோகு, பட்டை, கெளுத்தி போன்ற மீன்கள் குத்தகைக்காரர்கள் மூலம் வளர்க்கப்பட்டு வந்தது. இந்நிலையில், வெயிலின் அளவு 100 டிகிரிக்கு மேல் இருப்பதால், ஏரியில் தண்ணீர் வற்றி வருகிறது.