பாஜ மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழர்கள் அகதிகளாவார்கள்: சுப.வீரபாண்டியன் பேச்சு

ஜோலார்பேட்டை: திருவண்ணாமலை மக்களவை தொகுதி ஜோலார்பேட்டை நகரம் கடைத்தெருவில் திமுக வேட்பாளர் சி.என். அண்ணாதுரையை ஆதரித்து திமுக சார்பில் நேற்றிரவு பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இதில் திராவிட இயக்கத்  தமிழர் பேரவையின் மாநில பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் பேசியதாவது:30 ஆண்டுகளுக்கு முன்பு ஜோலார்பேட்டை பகுதியில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் அதிகமாக ரயில்வே பணியில் இருந்தார்கள். ஆனால் தற்போது மோடி ஆட்சியால் வட நாட்டில் உள்ளவர்கள் அதிகமாக தமிழகத்தில் உள்ளார்கள்.  மோடி ஆட்சி மீண்டும் தொடர்ந்தால் தமிழர்கள் வேறு நாடுகளுக்கு அகதிகளாக வெளியேற வேண்டிய நிலை வரும். 2014-ல் மக்களை ஏமாற்றி ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படும் என மோடி கூறினார்.  ஆனால் தற்போது ஆண்டுக்கு 10 லட்சம் பேர் வேலையை இழந்து வருகின்றனர். எனவே அவரை இந்ததேர்தலில் மக்கள் ஏற்கமாட்டார்கள்.   

 

புல்வாமா தாக்குதலில் 44 ராணுவ வீரர்கள் உயிரிழந்தார்கள். ராணுவ வீரர்களை காப்பாற்ற முடியாத மோடி ஆட்சி, இந்த நாட்டை எப்படி காப்பாற்றப்போகிறது. ஜிஎஸ்டி வரியை உயர்த்தி நாட்டு மக்களை பணம் செல்லாது என்று  நள்ளிரவில் அறிவித்து மக்களை வங்கிகளின் எதிரில் நடுத்தெருவில் நிறுத்தியவர் மோடி. அவருக்கு அடிமையாக தமிழகத்தில் ஆட்சி புரிபவர் எடப்பாடி. இந்திய நாட்டையும், தமிழகத்தையும் காப்பாற்ற வரும் மக்களவைத் தேர்தலில் வாக்குச்சாவடிக்குச் சென்று நாட்டு மக்களுக்கு துரோகம் இழைக்கும் மோடி  ஆட்சிக்கும், எடப்பாடி ஆட்சிக்கும் முடிவு கட்ட திமுக கூட்டணிக்கு வாக்களியுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: