ஜோலார்பேட்டை: திருவண்ணாமலை மக்களவை தொகுதி ஜோலார்பேட்டை நகரம் கடைத்தெருவில் திமுக வேட்பாளர் சி.என். அண்ணாதுரையை ஆதரித்து திமுக சார்பில் நேற்றிரவு பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இதில் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் மாநில பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் பேசியதாவது:30 ஆண்டுகளுக்கு முன்பு ஜோலார்பேட்டை பகுதியில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் அதிகமாக ரயில்வே பணியில் இருந்தார்கள். ஆனால் தற்போது மோடி ஆட்சியால் வட நாட்டில் உள்ளவர்கள் அதிகமாக தமிழகத்தில் உள்ளார்கள். மோடி ஆட்சி மீண்டும் தொடர்ந்தால் தமிழர்கள் வேறு நாடுகளுக்கு அகதிகளாக வெளியேற வேண்டிய நிலை வரும். 2014-ல் மக்களை ஏமாற்றி ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படும் என மோடி கூறினார். ஆனால் தற்போது ஆண்டுக்கு 10 லட்சம் பேர் வேலையை இழந்து வருகின்றனர். எனவே அவரை இந்ததேர்தலில் மக்கள் ஏற்கமாட்டார்கள்.