அவனியாபுரம்: ரபேல் விமான ஊழல் குறித்து மத்திய அரசு மீது கூறப்படும் குற்றச்சாட்டு, நிரூபணமானால் தண்டனை நிச்சயம் என பிரேமலதா பேட்டி அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. மதுரை விமான நிலையத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: ரபேல் விமான ஊழல் குறித்து மத்திய அரசு மீது கூறப்படும் குற்றச்சாட்டு நிரூபணமானால் தண்டனை நிச்சயம். ஆனால் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வைத்து எதுவும் சொல்ல முடியாது. திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 தொகுதி இடைத்தேர்தல் தாமதமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் தேர்தல் பிரசாரம் செய்வாரா என்பது குறித்து 2 அல்லது 3 நாட்களில் தெரிவிக்கப்படும்.