வடசென்னை மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து, நடிகர் இமான் அண்ணாச்சி திருவொற்றியூர் தேரடி சந்திப்பில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு ஓட்டு போட்டு மோடியை பிரதமர் ஆக்கினீர்கள். என்ன ஆயிற்று. பெட்ரோல் விலை உயர்ந்தது. ஜிஎஸ்டி வரியால் தொழில்கள் முடங்கின. 1000, 500 ரூபாய் நோட்டு செல்லாது என திடீரென்று மோடி அறிவித்ததால் அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டார்கள். இதில் திமுகவினர் மட்டுமல்ல, பொதுமக்கள் மட்டுமல்ல, மாற்று கட்சியினர் கூட பாதிக்கப்பட்டார்கள். எனவே அனைவரையும் தயவு கூர்ந்து கேட்டுக் கொள்கிறேன், நாட்டு மக்களை அவதிக்குள்ளாக்கிய பாஜக, அதிமுக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்காதீர்கள்.