செங்கோட்டை: செங்கோட்டை அருகே மேக்கரை வனப்பகுதியில் காட்டுத் தீ பற்றி எரிவதால் வன விலங்குகள் ஊருக்குள் புகும் அபாயம் நிலவுகிறது. தமிழக கேரளா எல்லையிலுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டிய மேக்கரை தேரிக்காடு வனப்பகுதியில் நேற்று நண்பகல் 2 மணிமுதல் திடீரென காட்டுத் தீ பிடித்து கொழுந்துவிட்டு எரிந்து வருகிறது. இந்த தீயால் தேக்குமரங்கள், அரியவகை செடி, கொடிகள் தீ பிடித்து எரிகின்றன. தற்போது இந்த பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருவதால் பற்றிய தீ தொடர்ந்து எரிகிறது. மாலையில் அரை மணிநேரம் தொடர்ந்து மழை பெய்தும் தீ அணையவில்லை.