டெல்லி: ரஃபேல் விவகாரத்தில் ஆவணங்கள் மீது விரிவான விசாரணை நடத்தப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் ரபேல் விவகாரத்தில் இந்து நாளிதழில் வெளியான ஆவணங்களை பரிசீலிக்க உச்சநீதிமன்றம் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ரஃபேல் வழக்கு தொடர்பாக புதிய ஆவணங்கள் தாக்கல் செய்யலாம் என நீதிபதிகள் கூறியுள்ளனர்.