புதுடெல்லி: ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் நாட்டின் பாதுகாப்புடன் மோடி அரசு விளையாடுவதாக மார்க்சிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கடுமையாக சாடியுள்ளார். டெல்லியில் மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி நேற்று கூறியதாவது: இந்திய விமானப்படைக்கு தேவைக்கும் குறைவான ரபேல் விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதில், தனது தொழிலதிபர் நண்பர் ஆதாய மடையும் நோக்கில், முன் அனுபவமற்ற அவரது நிறுவனத்துக்கு ஒப்பந்தம் ஒதுக்கப்பட்டது.