சென்னை: தென் சென்னை தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் சைதாப்பேட்டை பகுதியில் வீதி வீதியாக சென்று இரட்டை இலை சின்னத்துக்கு ஓட்டு கேட்டார். அப்போது அவர் பேசியதாவது: எனது தீவிர முயற்சியின் காரணமாக சைதாப்பேட்டை தொகுதியில் முதியோர்களுக்கான பிரத்யேக சிகிச்சை மையம் 110 கோடியில் கட்டப்படுகிறது. இது விரைவில் திறக்கப்படும். ரயில் நிலையங்களில் நடை மேம்பாலங்கள் அமைக்கும் பணிகளும் நடந்து வருகின்றன. பெண்கள் பாதுகாப்புக்காக சைதாப்பேட்டை தொகுதியில் மட்டும் 50 லட்சம் நிதியில் சிசிடிவி கேமராக்கள் அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளேன். இதுபோன்ற வளர்ச்சித் திட்டங்களை நமது தொகுதியில் தொடர்ந்து நிறைவேற்றப்பட எனக்கு மீண்டும் வாய்ப்பு அளித்து வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ஜெயவர்தன் பேசினார்.