சென்னை: மூல நோயாளி போல் நடித்து ரூ.23 லட்சம் தங்கம் கடத்திய ஆசாமியை போலீசார் கைது செய்தனர். துபாயில் இருந்து சென்னைக்கு ஏர் இண்டியா விமானம் நேற்று காலை 5 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. அதில் பெருமளவில் கடத்தல் தங்கம் வருவதாக சுங்க அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. எனவே, அதிகாரிகள் அதில் வந்த அனைத்து பயணிகளின் உடமைகளையும் தீவிரமாக சோதனையிட்டனர்.
இந்நிலையில், சென்னையை சேர்ந்த முகமது யூசுப் (38) என்பவர் துபாய்க்கு சுற்றுலா பயணியாக சென்றுவிட்டு திரும்பி வந்தார். அவர் மீது சுங்க அதிகரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அப்போது முகமது யூசுப் தன்னிடம் சுங்க தீர்வை செலுத்தும் பொருட்கள் ஏதும் இல்லை. வேண்டுமென்றால் என்னுடைய அனைத்து போருட்களையும் சோதனை போட்டுக் கொள்ளுங்கள் என்று கூறி, அவராகவே தன்னுடைய பை, சூட்கேஸ் ஆகியவற்றை திறந்து காட்டினார். அவர்களும் துருவித்துருவி சோதனை நடத்தினர். ஆனாலும் அதிகாரிகளுக்கு சந்தேகம் தீரவில்லை.