குஜராத்தில் உள்ள 26 மக்களவை தொகுதியிலும் வெளியூர் வேட்பாளர்களுக்கு வாய்ப்பளிக்காமல் அந்தந்த மண்ணின் மைந்தர்களையே வேட்பாளராக பாஜ மேலிடம் அறிவித்து வருகிறது. குஜராத்தில் வருகிற ஏப்.23ம் தேதி தேர்தல் நடக்கிறது. மொத்தம் உள்ள 26 தொகுதிகளில் 19 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருமே அந்தந்த தொகுதிகளைச் சேர்ந்தவர்கள் தான். மீதியுள்ள 7 தொகுதிகளுக்கும் மண்ணின் மைந்தர்களையே வேட்பாளர்களாக தேர்ந்தெடுக்க பா.ஜ. ேமலிடம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து பா.ஜ. நிர்வாகிகள் கூறியதாவது: கட்சி மேலிடம் கடந்த தேர்தல்களில் வெளியூர்காரர்களை வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளது. அவர்கள் வெற்றி பெற்ற பின்னர் தொகுதியை எட்டிக் கூட பார்ப்பதில்லை. மாவட்ட நிர்வாகிகள் கூட சம்பந்தப்பட்ட எம்.பி.யை தொடர்புக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டு விடுகிறது.