காட்பாடியில் திமுக பொருளாளர் துரைமுருகன் மகனுக்கு சொந்தமான கல்லூரியில் வருமான வரித்துறையினர் சோதனை

காட்பாடி: காட்பாடியில் திமுக பொருளாளர் துரைமுருகன் மகனுக்கு சொந்தமான கிங்ஸ்டன் கல்லூரியில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். வேலூர் மக்களவைத் தொகுதியின் திமுக வேட்பாளராக கதிர் ஆனந்த் போட்டியிடும் நிலையில் அரவருடைய கல்லூரியில் சோதனை நடைபெற்று வருகிறது. பள்ளிப்பாளையத்தில் திமுக பகுதி செயலாளர் சீனிவாசன் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். நேற்று முன் தினம் துரைமுருகன் வீட்டில் சோதனை நடைபெற்ற நிலையில் தற்போது அவருடைய நண்பர் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: