அரியலூர்: அரியலூரில் தேர்தல் பார்வையாளரான ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் மதுபோதையில் வானத்தை நோக்கி சுட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. ஐபிஎஸ் அதிகாரி ஹேமந்த் தேர்தல் பணிக்காக அரியலூர் மாவட்டத்திற்கு வந்து சுற்றுலா விடுதியில் தங்கியுள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை இவர் மதுபோதையில் இருந்ததால் அவருடைய உதவியாளர் துப்பாக்கியை வாங்கி 9 முறை வானத்தை நோக்கி சுட்டுள்ளார். இதனையடுத்து அவருடைய உதவியாளர் புகார் கொடுத்ததால் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி, மாவட்ட எஸ்.பி சீனிவாசன் மற்றும் பெரம்பலூர் எஸ்.பி ஆகியோர் விசாரணை செய்ததில் உண்மையை ஒப்புக்கொண்டதால் ஐபிஎஸ் அதிகாரி ஹேமந்த் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.