காட்பாடி: சோதனை நடத்திய வருமான வரித்துறையினர் ஏவப்பட்டவர்கள் என்று காட்பாடியில் துரைமுருகன் பேட்டியளித்துள்ளார். கணக்கு வழக்குகள் சரியாக உள்ளதால் எதையும் பறிமுதல் செய்யவில்லை என எழுதி கொடுத்துவிட்டனர். நள்ளிரவில் தொடங்கிய வருமானவரி சோதனை இப்போதுதான் நிறைவு பெற்றது என்று துரைமுருகன் தெரிவித்தார். கல்லூரியில் உள்ள வகுப்பறைகள், மாணவர் விடுதியில் உள்ள அலமாரியை உடைத்து சோதனை நடத்தினர்.