பெங்களூரு: பெங்களூரு அருகே கன்னட திரைப்படத்தின் படப்பிடிப்பில் சிலிண்டர் வெடித்து தாயும், மகளும் உயிரிழந்தது குறித்து படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வி.சமுத்ரா இயக்கத்தில் சிரஞ்சீவி சார்ஜா சேத்தன் நடிப்பில் கன்னட படம் தயாராகி வருகிறது. இந்த படத்தின் சண்டை காட்சிக்கான படப்பிடிப்பு பெங்களூரு அருகே உள்ள பாகலூரில் நடைபெற்றது. காட்சி அமைப்பின் படி கார் மோதி தீப்பிடிப்பது போன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.