ஒகாசோகூ: மாலியில் டோகான் என்ற தீவிரவாத குழு நடத்திய கொடூர தாக்குதலில் பலி எண்ணிக்கை 160 ஆக உயர்ந்துள்ளது. மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மாலி நாட்டில் புலானி என்ற விவசாய குழுவினருக்கும், டோகான் என்ற தீவிரவாத குழுவினருக்கும் இடையே அடிக்கடி மோதல் நடைபெறுவது வழக்கம். கடந்த ஆண்டு இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற மோதலில் பொதுமக்கள் 500 பேர் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் மத்திய மாலி நாட்டின் மோப்டி நகரம் அருகேயுள்ள கிராமமான ஒகாசோகூவில் கடந்த சனிக்கிழமை டோகான் தீவிரவாத குழுவினர் திடீரென ஆயுதங்களுடன் புகுந்தனர். அவர்கள் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டும், அரிவாளால் வெட்டியும் அப்பகுதி மக்களை ெகாடூரமாக தாக்கினர். இதில் பெண்கள், குழந்தைகள் உள்பட 136 பேர் கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.